Friday, 8 June 2007

துடிக்கும் இதயம்


நோக்கும் திசையெல்லாம்
உன் உருவம்
பரவசத்தில் கண்விழித்து
நோக்கும் முன்
கண் இமைக்கும் பொழுதில்
மறையும் உன் பிம்பம்
எதிரில் வரும் உருவமெல்லாம் - நீ
நம் காதலை வாழவைக்க...
என்னிடம் வா
என் உயிரே
நாயகனே
உன்னை நினைக்காத நொடியேது?
புது உறவு வந்து
புது வசந்தம் வீசும்மென்று
புது கணக்கு போட்டேன்
என் நேரமும் விழியுறங்காமல்,
விழிவீங்கி கதிகலங்கி
மனம் புலம்பி,
இதயத்தில் இடிந்து சரிகிறேன்!
மீண்டும் மீண்டும் உன் நினைவுகள்
என்னை காயப்படுத்த
இரக்கமில்லாததா இதயமா?
காதல் கொடூரமானதா?
கவிதை வடிக்க நான்
கவிதாயினி அல்ல
முகவரி இல்லாமல்
முகவரியை தேடும்
உன் ஜீவன் நான்
விரைவில் வா நாயகனே
என் அருகில்.............

1 comments:

said...

நன்றி சதுர்வேதி தொடர்ந்து இணைந்திருங்கள்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது