Friday, 8 June 2007

வேண்டும் வேண்டும்


அன்பே
நீ ஒரு குடை மாதிரி
வெயில் காலத்திலும்
மழைக்காலத்திலும்
என் கூடவே
இருக்க வேண்டும்
நீ ஒரு ஆடை மாதிரி
பகலிலும் இரவிலும்
என் மேனியை தழுவியே
இருக்க வேண்டும்
ஆடையில்லாமல்
ஆடிப்பாடி திரிந்த
அந்த முதல் காதல் ஜோடி
ஆதாம் ஏவாலை சந்திக்க
ஆசை
அந்த
ஆணந்த நிர்வாணத்தை
அவர்களிடம் வாங்கி வந்து
அப்படியே நாமும்
அணிந்து பார்க்க
ஆசை
அன்பே
உன் பெயரெழுதும் போதெல்லாம்
என் பேனா பெருமை கொள்கிறது.

0 comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது