Wednesday, 4 July 2007
Friday, 8 June 2007
துடிக்கும் இதயம்
நோக்கும் திசையெல்லாம்
உன் உருவம்
பரவசத்தில் கண்விழித்து
நோக்கும் முன்
கண் இமைக்கும் பொழுதில்
மறையும் உன் பிம்பம்
எதிரில் வரும் உருவமெல்லாம் - நீ
நம் காதலை வாழவைக்க...
என்னிடம் வா
என் உயிரே
நாயகனே
உன்னை நினைக்காத நொடியேது?
புது உறவு வந்து
புது வசந்தம் வீசும்மென்று
புது கணக்கு போட்டேன்
என் நேரமும் விழியுறங்காமல்,
விழிவீங்கி கதிகலங்கி
மனம் புலம்பி,
இதயத்தில் இடிந்து சரிகிறேன்!
மீண்டும் மீண்டும் உன் நினைவுகள்
என்னை காயப்படுத்த
இரக்கமில்லாததா இதயமா?
காதல் கொடூரமானதா?
கவிதை வடிக்க நான்
கவிதாயினி அல்ல
முகவரி இல்லாமல்
முகவரியை தேடும்
உன் ஜீவன் நான்
விரைவில் வா நாயகனே
என் அருகில்.............
Posted by
Sinthu
at
20:29
1 comments
வேண்டும் வேண்டும்
அன்பே
நீ ஒரு குடை மாதிரி
வெயில் காலத்திலும்
மழைக்காலத்திலும்
என் கூடவே
இருக்க வேண்டும்
நீ ஒரு ஆடை மாதிரி
பகலிலும் இரவிலும்
என் மேனியை தழுவியே
இருக்க வேண்டும்
ஆடையில்லாமல்
ஆடிப்பாடி திரிந்த
அந்த முதல் காதல் ஜோடி
ஆதாம் ஏவாலை சந்திக்க
ஆசை
அந்த
ஆணந்த நிர்வாணத்தை
அவர்களிடம் வாங்கி வந்து
அப்படியே நாமும்
அணிந்து பார்க்க
ஆசை
அன்பே
உன் பெயரெழுதும் போதெல்லாம்
என் பேனா பெருமை கொள்கிறது.
Posted by
Sinthu
at
20:23
0
comments
Thursday, 17 May 2007
Wednesday, 16 May 2007
Subscribe to:
Posts (Atom)




